May 7, 2011

தமிழ் பத்திரிக்கைகள் யாருக்காக?

போர் குற்றவாளி ராசபட்சேவை கண்டித்து கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை அனைத்து பத்திரிக்கை நிருபர்களும் படம் பிடித்தனர்.

தினகரன் தமிழ்பத்திரிக்கையில் இருந்து விடுபட்டு மலையாள பத்திரிக்கையில் நேற்று தான் பணியில் சேர்ந்தேன். ராசபட்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நானும் படம் எடுத்தேன். 

சக நிருபர் ஓருவர் கிண்டல் அடித்தார். தமிழ்பத்திரிக்கைகளே ராசபட்சேவுக்கு எதிரான படத்தை செய்திகளை கண்டுகொள்வதில்லை. மலையாள பத்திரிக்கை நிச்சயம் வெளியிடமாட்டார்கள் என்றார்.

காலை விடிந்தது. எந்த தமிழ்பத்திரிக்கையிலும் படம் வெளிவரவில்லை. மலையாள மனோரமாவில் வண்ணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.


ராசபட்சேவை போர்குற்றவாளி என்று ஒரு மலையாள பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்த முதல் நாளே, முதல் படமாக வெளியிட்டது தமிழனான எனக்கு பெருமையே.

No comments:

Post a Comment

Popular Posts