Apr 17, 2016

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3

திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்தியா சுதந்திரம் பெற்றதை இரண்டு தலைவர்கள் எதிர்த்தார்கள். இந்திய சுதந்திரம் வேண்டாம் என முழக்கம் இட்டார்கள். 

1. தந்தை பெரியார்
2. அண்ணல் அம்பேத்கர்

இவர்கள் இருவரும் இந்திய சுந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தார்கள்.

மாபெரும் தலைவர்கள் இருவரும் இந்த நிலைபாட்டை எடுக்க காரணம் என்ன?

ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலைப்பெற்று, ஆரியனிடம் அடிமையாக நாங்கள் தயாரில்லை என பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்.

இவர்களின் குரல் பட்டிதொட்டி எல்லாம் பரவியது. இவர்களின் குரலில் நியாயம் இருக்கிறது என ஆங்கிலேயர்களே உணரத் துவங்கினர்.  வடக்கே அம்பேத்கரும், தெற்கே பெரியாரும் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக மபெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்தினார்கள். 

அப்போது தான் காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் இந்த இரு தலைவருக்கும் இடையே முதலில் பிரிவினையை விதைக்க முடிவு செய்தனர். அந்த முயற்சியின் எதிர்வினை தான் முகமது அலி ஜின்னாவால் பாகிஸ்தான் பிரிந்து போனது.(அது தனிக் கதை.) 

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நீங்களே தலைமை தாங்கி எழுதுங்கள் என்ற ஆசை வார்த்தையை அம்பேத்கரிடம் கூறினார் காந்தி. அந்த வார்த்தையில் ஏமாந்த அம்பேத்கர் பின்னாளில் வருத்தப்பட்டார். தன் வாழ்நாள் தவறு என அதை ஒத்துக்கொண்டார்.

ஆனால் தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையில் உறுதியாக இருந்தார். அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்ற தாரக மந்திரத்தை தன் தோழர்களிடம் விதைத்தார். 

அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை பகிரங்கமாக எதிர்த்தார் தந்தை பெரியார். இது ஆரியர்களின் மாயவலை என குற்றம் சாட்டினார். இதை பின்னாளில் அம்பேத்கரும் ஒப்புக்கொண்டார்.

திராவிட கழகம் இந்திய தேர்தல் அரசியலில் ஈடுபடாது. திராவிடநாடு அமையும் வரை இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என அறிவித்தார் பெரியார்.

காந்தியின் ஆசை வார்த்தையில் அம்பேத்கர் ஏமாந்தது போல, நேருவின் ஆசை வார்த்தையில் அறிஞர் அண்ணா  ஏமாந்தார்.   

தேர்தல் அரசியலில் திரவிட கழகத்தினர் ஈடுபட வேண்டும். ஆட்சி அதிகாரத்தை கைபற்ற வேண்டும். அதன் மூலம் திராவிட நாட்டை அடைந்துவிட முடியும் என நம்பினார் அறிஞர் அண்ணா.

தேர்தலை சந்தியுங்கள், உங்கள் திராவிட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்தால், நாங்களும் ஏற்றுகொள்கிறோம் என்றார் நேரு. இந்த ஆசை வார்த்தையில் வீழ்ந்தார் அறிஞர் அண்ணா. அன்று முதல் பெரியாரின் அத்தனை போராட்டங்களும் பாழாக துவங்கியது.

    - தொடரும்.

No comments:

Post a Comment

Popular Posts