Apr 17, 2016

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4

இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெரியாரின் திராவிட நாடு கொள்கை தனிமைப் படுத்தப்பட்டது. ஆனாலும் அது வலுவாக இருந்தது. பெரியாரை ஆரியரால் மயக்க முடியவில்லை. 

திராவிடர்களை மொழி ரீதியாக எளிதில் பிரித்துவிடலாம் என ஆரியர்கள் திட்டம் தீட்டினர். தென்னிந்தியாவில் மொழிப் பிரிவினையை தூண்டி விட்டனர். 

முதல் போராட்டமாக தனித்தெலுங்கான போராட்டம் வெடித்தது. திராவிடம் உடைய ஆரம்பித்தது. இரண்டாம் போராட்டமாக ஐக்கிய கேரளம் கோரப்பட்டது. மூன்றாம் போராட்டமாக கன்னடர் & மராட்டியர் தமக்குள் அடித்துக் கொண்டனர். 

உண்மையில் தனித்தெலுங்கான போராட்டம் என்பது தனிமாநிலம் கேட்ட போராட்டம் அல்ல. தனிநாடு கோரிய போராட்டம். இது சக்திவாய்ந்த போராட்டமாக இருந்தது. இந்தியாவை அசைத்து பார்க்கும் போராட்டமாக இருந்தது. ஏன் வெற்றிபெரும் நிலையை கூட எட்டியது. 

விடுவார்களா ஆரியர்கள்?

தெலுங்கான அமைத்து தர நாங்கள் தயார் என பகிரங்கமாக அறிவித்தனர். ஒவ்வொரு தேசிய கட்சியும் போட்டி போட்டு ஆதரித்தன. அப்போதும் அதை மாயவலை என அறிவித்தார் தந்தை பெரியார்.

தெலுங்கான அமைய திராவிட நாடு கோரிக்கை தான் தடையாக உள்ளது என ஆரியர்கள் பரப்புரை செய்தனர். தெலுங்கானாவின் தெற்கு பகுதிகள் சென்னை மாகாணத்தில்(மெட்ராஸ் ஸ்டேட்) உள்ளன. முதலில் அதை பிரிக்க வேண்டும் என ஆலோசனை கூறினர்.

வெடித்தது மொழிப்போர் - திராவிடத்துக்கு எதிராக!, 

நாங்கள் திராவிடர் அல்லர் என தெலுங்கானா தலைவர்கள் அறிவித்தனர். அதே பாணியில் கர்நாடகா, கேரள தலைவர்களும் முழக்கம் இட்டனர். 

எல்லாவற்றையும் பார்த்து இரசித்த ஆரியர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தனர்.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் என்பது தான் அந்த கல். தெலுங்கானா, திராவிட நாடு கோரிக்கைகளை ஒரே தீர்வில் ஒடுக்குவது தான் அதன் நோக்கம்.

மெட்ராஸ் ஸ்டேட் உடைக்கப்பட்டது. 

மெட்ராஸ் ஸ்டேட் உடைந்தால் தெலுங்கானா அமையும், திராவிடநாடு அமையும் என இருநாட்டு திராவிட தலைவர்களும் காத்திருந்தனர்.

விளைவு எல்லோரும் ஏமாற்றப்பட்டனர். 

ஐக்கிய கேரளம் உருவானது  என்ற ஒன்றை தவிர  - இதில் எந்த திராவிட போராட்டமும் வெற்றி பெற வில்லை.

தெலுங்கானா அமையவில்லை, மாறாக ஐக்கிய ஆந்திராவை ஏற்படுத்தி தெலுங்கர்களுக்குள்ளேயே பிரிவினையை தூண்டி குளிர்காய்ந்தனர். 

மலபார் மாவட்டங்களை பிரித்து கர்நாடகத்தை உருவாக்கினர். அங்கேயும் ஆரியர் சூழ்ச்சியே வென்றது. குடகு மாவட்டத்தை மெட்ராஸ் ஸ்டேட்டில் நிலைநிறுத்தாமல் கர்நாடகமாக மாற்றினார்கள். இதனால் இன்று வரை காவிரி என்ற ஒற்றை சொல்லில் கன்னடியர் திராவிடத்தை எதிர்த்து வருகின்றனர்.

மெட்ராஸ் ஸ்டேட் உடைக்கப்பட்டு 
ஆந்திரா உருவானது, 
கர்நாடகா உருவானது, 
கேரளா உருவானது, 
ஆனால் தமிழ்நாடு உருவானதா என்றால் 
இல்லை என்பது தான் பதில்!

தமிழ்நாடு என அறிவிக்க முடியாது. அது மெட்ராஸ் ஸ்டேட்டாகவே இருக்கும் என தீர்க்கமாக கூறிவிட்டனர் இந்திய ஆட்சியாளர்கள்.

மெட்ராஸ் ஸ்டேட்டை உடைத்து, திராவிட மாநிலங்கள் காலத்துக்கும் அடித்துக்கொள்ள தக்க ரீதியில் எல்லைகளை பிரித்தார்கள். இதனால் என்றுமே திராவிட நாடு உதயமாக சாத்தியம் இல்லை என தீர்மானித்தார்கள்.

ஆனாலும் தந்தை பெரியார் விடவில்லை. அவரது திராவிடநாடு பேராட்டம் தொடர்ந்தது. ஆனால் அண்ணாவின் அவசர முடிவால் வீழ்ந்தது தந்தை பெரியாரின் திராவிட போராட்டம்.
- தொடரும். 

No comments:

Post a Comment

Popular Posts